இறைவன் நாட்டம்

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

காய்ச்சீரும் மாச்சீர் தேமா (அரையடிக்கு)
விளமுடன் மாச்சீர் தேமா (அரையடிக்கு)
வாய்பாட்டில் அமையும் பாடல்
வளமுடன் விருத்தம் தேடல்
 
உடுக்கையும் களைந்து விட்டால்
        உன்னிடம் நாணம் போகும்;
அடுக்கடுக்காய்ச் சேர்த்தச் செல்வம்
      அழிந்திடும் நேரம் வந்தால்;
படுத்திட்ட வீடும் போனால்
      படுப்பதுத் தெருவின் ஓரம்;
திடுக்கிட்ட முடிவா லாட்சித்
     தீர்ந்திடும் நிலையி லாகும்
இத்துணைச் செல்வம் தந்த
      இறைவனின் கருணை யோசி
சத்தியமாய்க் கடவு ளாட்சி
      சக்தியாய் நிலைக்கும் காட்சி
புத்தியுடன் நடந்து கொண்டு
     புகுந்திடுச் சுவன வாழ்வில்
உத்தமர்கள் வாழ்வைப் போற்றி
      உலகினில் நடப்பாய் நாளும்
 
 
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
 
எனது வலைப்பூத் தோட்டத்தில் உங்கள் தடம் பதிக்க:
 
http://www.kalaamkathir.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *