இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் அமமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

முதுகுளத்தூரில் அமமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

முதுகுளத்தூர் :

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர், அஇஅதிமுக பொதுச்செயலாளர், செல்வி ஜெ, ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, கவுன்சிலர் கருப்பணன், பொருளாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் சேதுபதி, முத்துராமலிங்கம், முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு முத்துக்குமார், வார்டு செயலாளர்கள் இராமபாண்டி, செந்தில்குமார், எபினேசர், மூர்த்தி பெயிண்டர், கூரி, திருமுருகன் மற்றும் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button