இராமநாதபுரம்

வக்பு வாரிய தலைவருக்கு பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஏற்பாட்டில் கடலாடி மற்றும் முதுகுளத்தூர் கமுதி வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பங்கேற்ற நவாஸ் கனி எம்பி நன்றி தெரிவித்தல் மற்றும் வக்பு வாரிய தலைவருக்கு பாராட்டு விழா ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கடலாடி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவரும். மாவட்ட ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான ஹாஜி.டி.எம் அப்துல் முத்தலிபு. முதுகுளத்தூர் கமுதி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி.எம். ஜாஃபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர்.ஏ.ஜெய்னுல் ஆலம் வரவேற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக வக்பு வாரிய தலைவருமான கே நவாஸ் கனி தனக்கு வாக்களித்த மற்றும் தேர்தல் பணியாற்றிய ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தும் வக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்ற தனக்கு பாராட்டு தெரிவித்த ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும் உரையாற்றினார்.

சித்தையன் கோட்டை கமால் பாஷா எழுதிய மூப்பு இறப்பு பிறப்பு என்ற புத்தகத்தை எம்பி நவாஸ் கனி வெளியிட மாவட்ட தலைவர் எம். எஸ். ஏ. ஷாஜகான் பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் வாலிநோக்கம் ரஹ்மத்துல்லாஹ், முதுகுளத்தூர் முகமது இக்பால் ,பரமக்குடி முகமது இலியாஸ், முன்னாள் பேரூராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா, முதுகுளத்தூர் கமுதி வட்டார செயலாளர் அல்லா பக்ஸ், பொருளாளர் எஹியா, கடலாடி வட்டார பொருளாளர் நாகூர் மீரா, எம்பி நேர்முக உதவியாளர் அப்துல் ஜப்பார்,வக்ப் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பக்ருல் அமீன் நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button