இராமநாதபுரம்
தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரவைசிய சபைத் தலைவர் பாலுசாமி, இணைத்தலைவர் ராசி என்.போஸ், சபை செயலாளர் லெனின் குமார், பள்ளித் தாளாளர் எஸ் ஆர் சதீஷ்குமார் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டியை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஆயிர வைசிய சபை பொருளாளர் ஏ ஆர் சுப்பிரமணியன், பள்ளி பொருளாளர் சுதர்சன், கல்வி குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





