முதுகுளத்தூரில் பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு
முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 11 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (48). இவர் முதுகுளத்தூர் தேவேந்திர நகரில் உள்ள தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தாராம்.
அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனராம்.
இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.