டூவீலரில் சென்ற பெண் பலி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே டூவீலரில் சென்ற பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் அருகேயுள்ள மாரந்தை கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி மனைவி முத்துமீனாள்(52). இவர் நேற்று தனது உறவினருடன் டூவீலரில் கடலாடி சென்றார். மாரந்தை அரு கே சென்றபோது தனது சேலை பைக்கின் வீலில் சிக்கி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடை ந்த முத்துமீனாளை கடல டி அரசு மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளஞ்செம் பூர் எஸ்ஐ.ஜெயக்குமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.