மரமும் மழையும்
சுரண்டும் மணலால் சும்மா தங்குமா
திரண்டு வருகின்றத் தண்ணீர் எங்குமே?
கறந்த பாலும் கனமடி புகாதே
வறண்ட நிலமும் வளத்தினைத் தராதே
கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் மரக்கட்டை
கட்டையாகிப் போனபின்பும் மரக்கட்டை
மட்டில்லாச் சேவைகளைச் மரங்களுந்தான்
மனிதனுக்குச் செய்துவந்தும் மறந்துபோனான்
இயற்கையெனும் இளையகன்னி மரமென்போம்
இறைவனளித்த ஈடில்லா வரமென்போம்
செயற்கையாய்க் காண்பதெலாம் வெறுந்தோற்றம்
செழுமையினைத் தந்திடுமே பெருந்தோட்டம்
— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி