கவிதைகள் (All)

பிரிவு …

 

–    கவிஞர் கிளியனூர் இஸ்மத் —

 

கருவறையைப்

பிரிந்தபொழுது

நான் அழுதேன்…

 

பள்ளிக்கு அனுப்பி விட்டுத்

தாய் அழுதாள்…

 

கல்லூரிப் படிப்பு முடிந்து

காதலர்கள் அழுகிறார்கள்…

 

கணவனைப் பிரியும் பொழுது

மனைவி அழுகிறாள்…

 

உயிர் பிரியும் பொழுது

உறவு அழுகிறது…

 

பிரிவு என்பது

காலமும் தூரமும்

செய்த நிர்ணயம்…

 

எண்ணத்திலும்

உள்ளத்திலும்

நினைவு

வாழுகின்ற பொழுது

எது பிரிந்தது…?

 

உடல்

காற்று ஊதப்பட்ட

பந்து – அது

ஆன்மாவால்

அலங்கரித்துக்

கொண்டிருக்கிறது.

 

எங்கிருந்து

புறப்பட்டோமோ

அங்கே

சேர வேண்டுமென்பது

நியதி !

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button