கவிதைகள் (All)

எழுதிக் குவிப்பேன்

எழுதிக் குவிப்பேன்

இழிவாய் இருப்பதை எழுத்தால் கொல்ல
வழியை சமைப்போம் வாராய் தமிழனே
பழிச்சொல் அற்றப் பிறவியை வென்றிட
தொழுதிடும் மொழியாய் தமிழை ஆக்கிட
எழுவோம் தனித்தமிழ் இயக்கமாய் மாறியே

கள்ளம் கூடிடக் கண்கள் நோக்கிட
உள்ளம் இரண்டும் ஒன்றாய் இணைங்கிட
தெள்ளுத் தமிழுடன் தன்னிசைப் பாடிட
முள்ளென முளைத்த மதமும் சாதியும்
கல்லறை அடைந்திட காதல் ஒன்றே
நல்லதோர் செயலென நவில்வேன் நானே

ஏற்றத் தாழ்வுகள் இனியும் இல்லென
சுற்றம் உற்றமும் சேர்ந்துப் பாடிட
கற்புடன் கலந்தக் காதலை வாழ்த்துவேன்
ஆற்றங் கரையோ அலுவல் இடமோ
பற்றியக் காதல் பிணக்கிலாத் தொடர்ந்திட
முற்றுரை இன்றியே மகிழ்ந்திட போற்றுவேன்

கழகநூல் காட்டும் காதல் பாதையில்
விழுதுகள் தொடந்தால் வாழ்விலே எவ்வகை
இழுக்கும் சேரா தென்றேக் கதைப்பேன்
பழகுத் தமிழுடன் பகர்ந்திடும் சொல்லையும்
பழுதிலாக் காதலின் பாசறை செயலையும்
எழுதிக் குவிப்பேன் இறக்கும் வரையிலே

பரணிப்பாவலன்
தமிழினப் பேரியக்கம் 7871187306

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button