மருத்துவம்
சாப்பிடும்பொழுது தவிர்க்கவேண்டியவை
- தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே.
- புத்தகம் படிக்காதே.
- எவருடனும் உரையாடாதே.
- கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து.
- அம்மாக்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தவேண்டாமே !
- முகம் கை கால் அலம்பிய பின் உணவருந்திடு.
- குளித்துமுடித்தபின்னர் முக்கால் மணி நேரத்திற்கு உணவருந்தாதே. உணவருந்தியபின் இரண்டரை மணி நேரம் வரை குளிக்காதே.
- இயற்கை உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடு.
- பசிக்கும்பொழுது மட்டும் உணவு கொள். அதை மனதிற்குப் பிடித்த மாதிரி ரசனையுடன் சாப்பிடு
- ஏப்பம் வரும்வரை திகட்டும்வரை உணவருந்து. ஏப்பம் வந்தபின் உணவருந்துவதை நிறுத்திவிடு. (ஏப்பம் – இரைப்பையில் வேலை முடிந்து உணவு சிறுகுடலுக்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கான உடலின் சமிக்ஞை. உணவருந்தும்பொழுது ஏப்பம் வந்தால் நீங்கள் சரியான முறையில் உணவருந்தியதாய் பொருள்.)