இராமநாதபுரம்

கோடாரேந்தல் கிராமத்தில் பயணியர் நிழற்குடை – கே நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், உலையூர் ஊராட்சி, கோடாரேந்தல் கிராமத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் ,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ்கனி எம்பி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் .

இந்நிகழ்வில் திமுக முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் டி அருளானந்த், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலாளர் அப்துல் ஜப்பார் ,மாநில இளைஞர் அணி அமைப்பு குழு உறுப்பினர் நைய்னா முகம்மது ,கீழக்கரை நகர் இளைஞரணி இலியாஸ் ,ஆற்றங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல் அஃபான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button