புத்தாண்டில் உறுதி மொழி

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

பூத்திருக்கும் புத்தாண்டில் புத்துணர்வு பூத்திடக்
காத்திருக்கும் உங்கள் கடமைகள்- யாத்திருக்கும்
பாக்கள் அரங்கேற்றம் பார்த்தல்போல் வெற்றிபெற
ஊக்கம் பெறுதல் நலம்.
 
நலமுடனே வாழ்வை நகர்த்தலுக்குத் தேவை
பலமுடனே தேகப் பயிற்சி – விலகிவிடும்
நோய்கள் விரைவாக நோக்காய் அடிக்கடிநாம்
காய்கனிகள் உண்ணல் சிறப்பு.
 
சிறப்பான வாழ்வைச் சிறிதாய்ச் சுருக்கிப்
பிறப்பால் உயர்ந்த பிறவி – நிறத்தால்
இனத்தால் மொழியால்  இழிவாய்ப் பிரியும்
மனத்தினை விட்டிடும்  நாள்.
 
நாளும் மனத்திலே நாட்டம் மிகுந்திட
ஆளும் இறையினை ஆர்வமுடன் – கேளும்
வளமான வாழ்வு வலுவான எண்ணம்
களத்தில் மகிழ்வினைப் பூத்து
 
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டத்தில் உலா வர வழி:
 
http://www.kalaamkathir.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *