General News

முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி

கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி
(6 Feb) ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கல்லூரி துவக்க வேண்டுமென்று எம்.முருகன் எம்.,எல்.ஏ தமிழக முதல்வருக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார். அந்த கோரிக்கையை முதல்வர் ஏற்று முதுகளத்தூர் மற்றும் கடலாடியிலும் அரசு கல்லூரிகளை துவக்க சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் ஆலோசனையில் பேரில் பரமகுடி கோட்டாட்சியர் குணாளன், முதகளத்தூர், கல்டலாடியில் முகாமிட்டு இடங்களை நேரில் பார்வையிட்டார்.
கோட்டாட்சியருடன்,வட்டாட்சியர்கள் செழியன்(முதுகளத்தூர்) அமிர்தம்(கடலாடி) மற்றும் வருவாய்துறையினரும் சென்றார்கள்.இடங்கள் தேர்வு செய்துள்ளது குறித்து அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பபடும் என்றும் இடம் தேர்வுக்கு பின் கல்லூரி கட்டும் பணி துவங்கும் என்றும் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button