கவிதைகள் (All)

அரசியல்…….

ஆயிரம் வாக்குறுதி அள்ளி வீசி
வந்து சேர்ந்தது….நாற்காலி….
பதவி மோகம்…பாரம் ஏற….
பிடித்ததும்…..பறந்தது…
வேகமாய்….வாக்குறுதி……
நம்பிய மனங்கள்…
நித்தம்..குவிக்கும்…
விண்ணப்ப மூட்டைகள்..
நாளை பார்க்கலாம்…என..
நாளும் நகர்ந்தோட…..
நாற்காலி வந்த வழி மறக்க…..
காற்றுள்ள போதே தூர்க்கும்…குணம்…
தூபம் போடும் தோழர்கள் ….
பத்து வித மோதிரம்……
புலிநகம் பதித்த சங்கிலி…
மின்னும் உடை…மிடுக்கு நடையுமாய்….
கௌரவம் காப்பாற்றி……
சுயநலம் கூத்தாட……
கும்பிட்டுக் கேட்ட ஓட்டு…
நிழலாய் மனம் விட்டு நகர…..
பதவியின்……இறுமாப்பு………
மனசெல்லாம்  ஆள…
படித்துப் பார்க்க ஆவல் இன்றி…
சிதையாய்  எரிந்தது……
விண்ணப்ப மூட்டைகள்…
ஒவ்வொரு ஓட்டின் நம்பிக்கையும்….!!!

ஜெயஸ்ரீ ஷங்கர்…
jayashree43@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button