கவிதைகள் (All)

தெரியாமல் தெரியவரும் கருவூலம் !

திருவுரு வாயிருந்தும்
தெரியாமல் தெரியவரும்
கருவூல மாகஉள்ளான் ஒருவன்–அவன்தான்
கருணையங் கடலான இறைவன்! (திருவுரு…)            1.
 
அண்டகோ ளங்களெல்லாம்
உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக்
கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்–அவன்தான்
அன்புமழை யாய்ப்பொழியும் இறைவன்! (திருவுரு…)  2.
 
ஆதியின்றி அந்தமின்றி
அழியாத பெரும்பொருளாய்
நீதிஎன்றும் செலுத்துகிறான் ஒருவன் –அவன்தான்
வேதம்”குர் ஆன்”கொடுத்த இறைவன்!   (திருவுரு…)    3.
 
சூனியத்தி லேயிருந்து
சூட்சுமத்தைத் தோற்றுவிக்கும்
மாண்புமிகுந்த அல்லாஹ் ஒருவன் –அவன்தான்
வேண்டியதெல் லாம்கொடுக்கும் இறைவன்!(திருவுரு) 4.
 
பற்றிருக்கப் பற்றறுத்து
பற்றுக் கொண்டு வெற்றிபெறக்
கற்றுத்தரும் நபியளித்தான் ஒருவன் –அவன்தான்
எத்திசைக் கும்அதிபதியாம் இறைவன்!!(திருவுரு)          5.
 
                                   —–  ஏம்பல் தஜம்முல் முகம்மது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button