General News

முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மண்டல மற்றும் மாவட்ட, வட்டார அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளிப்பு விழா, பெரிய பள்ளிவாசல் முஸ்லீம் ஜமாத் தலைவர் எஸ்.எம்.கே.காதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் தலைவர்கள் எம்.முகம்மது இப்ராகிம், எம். கே.முகம்மது இப்ராகிம்,  அயிரை சி.அப்துல் காதர், வி.செய்யது இப்ராகிம் மற்றும் தாளாளர்கள், ஹிம்மத்துல் இஸ்லாமிய வாலிபர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சேட் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேனிலைப்பள்ளி தாளாளர் எம். அன்வர் வரவேற்றார்.

பிளஸ் 2 தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவர் பழனிமுருகனுக்கு அமைச்சர் டாக்டர், ஆர்.சுந்தரராஜ், 2-ம் இடம் பெற்ற மாணவிகள் பிரியதர்சினி, நஸ்கத் சபானா ஆகியோருக்கு மு.முருகன் எம்.எல்.ஏ, 3-ம் இடம் பெற்ற மாணவி கவிதாவுக்கு மாவட்ட ஊராட்சிகள் கவுன்சில் தலைவர் வழக்குரைஞர், எம்.சுந்தர பாண்டியன் ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வழங்கினர்.   எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவி அனிசிஸ் சலிமாவிற்கு  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காசி, 2-ம் இடம் பெற்ற சண்முகபிரபுவிற்கு பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் ஏ.குணசேகரன், 3-ம் இடம் பெற்ற கவிபிரியாவிற்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பாட வாரியாக அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர்  சசிவர்ணம் சேகர் உள்பட பலர் பரிசு வழங்கினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிவாசல் மேனிலைப்பள்ளி முன்னாள் தாளாளர்கள் எஸ்.கமால் நாசர், கே.எம்.காத்ர முகைதீன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

விழாவில் ஜமாத் பிரமுகர்கள், அனைத்து சமூக பிரமுகர்கள், சர்வ கட்சியினர், அரசு அதிகாரிகள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button