இராமநாதபுரம்

கீழக்கரை மின்வாரியத்தை கண்டித்து எஸ் டி பி ஐ ஆர்ப்பாட்டம்!!

கீழக்கரை மின்வாரியத்தை கண்டித்து எஸ் டி பி ஐ ஆர்ப்பாட்டம்!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மின்வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் தொகுதி செயலாளர் கண்டன உரையாற்றினார் மேலும் கீழக்கரையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, மின் கணக்கீடு தாமதமாக எடுக்கப்படுவது, மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றை சுற்றி காட்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் எஸ் டி பி ஐ கட்சி பல முறை மின்வாரியத்திற்கு இது தொடர்பாக கோரிக்கை வைத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து இதே நிலை நிலவுமே ஆனால் கீழக்கரை மக்களை ஒன்று திரட்டி கீழக்கரை மின்வாரியத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் எஸ். டி. பி. ஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மின்வாரியத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button