கவிதைகள் (All)

மரணம் ஒரு பயணம்

இரவும் பகலும் மாறும்
          இறைவன் வகுத்த நியதி
வரவும் செலவும் சேரும்
          வணிகக் கணக்கின் நியதி
இரவு மட்டு மிருந்தால்
         இயங்க மறுக்கு முலகம்
வரவு மட்டு மிருந்தால்
       வணிக வளர்ச்சி விலகும்
 
 
உறவும் பிரிவு மிணைந்து
        ஊடலும் காதலும் கலந்து
பிறப்பின் முடிவி லுறவைப்
         பிரியு முயிரும் பறந்து
இறப்பின் மூலம் சென்று
        இறையைக் காண; மீண்டும்
பிறந்து மறுமை வாழ்வும்
       பின்னால் தொடர வேண்டும்
 
 
யாப்பிலக்கணம்: ஆறு மாச்சீர்கல் கொண்ட அறுசீர் விருத்தம்

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button