அஜ்மானில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

வளைகுடா

அஜ்மானில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

அஜ்மான் :
அஜ்மான் இந்திய சங்கம், இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து ஆசிரியர் தினத்தையொட்டி விருது வழங்கும் விழா நடந்தது.
மூன்றாவது ஆண்டாக நடந்த இந்த விழாவுக்கு சங்க தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
துபாய் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கல்வி இயக்குநர் டாக்டர் ராம்சங்கர், அஜ்மான் டெல்லி பிரைவேட் பள்ளிக்கூட முதல்வர் டாக்டர் விசால் கடாரியா, ஷார்ஜா கல்ஃப் ஆசியன் ஆங்கில பள்ளிக்கூட முதல்வர் டாக்டர் நஸ்ரின் பானு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த விழாவில் 11 பள்ளிக்கூட முதல்வர்களும், 22 ஆசிரியர்களும், 2023 ஆம் ஆண்டு நடந்த விழாவில் 47 முதல்வர்களும், 94 ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்த ஆண்டு நடந்த விழாவில் 81 முதல்வர்களும், 160 ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவையொட்டி மாணவ, மாணவியர் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்திய சங்க செயலாளர் ரூப் சித்து நன்றி கூறினார். சாயா தேவி உள்ளிட்ட குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *