மகாகவி பாரதியார் நினைவு நாள்

இலக்கியம் கவிதைகள் (All)

மகாகவி பாரதியார் நினைவு நாள்

பாரதியார் கவிதைகளை
தினமும் நீ வாசி.
பாரதியாரைப் போல்
பாரதத்தை நீ நேசி.
பாரதியார் புகழை நீ
பாரெங்கும் பேசி ,
பாரதியார் கனவு கண்ட
சுதந்திரக் காற்றை சுவாசி.

பாரிலுள்ள மாந்தர்களிடை
பாகுபாடு இல்லையென
பாடி வைத்த பாரதி ஓர்
பக்குவமிக்க சன்யாசி.

தெய்வ பக்தி , தேசபக்தி,
மனித நேயம் நிறைந்த
முண்டாசுக் கவிஞன் கூறியதை
மனதினிலே யோசி.

அவனைப் போல் தேசபக்தி,
தெய்வ பக்தி வேண்டுமென
அவன் வணங்கிய சக்தியிடம்
அனுதினமும் யாசி.

பாரதியின் பாதம் பணிந்து,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
11.09.2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *