தியாகத் திருநாள்!

இலக்கியம் கவிதைகள் (All)

தியாகத் திருநாள்!

எண்ணற்ற
தியாகங்கள்
இவ்வையத்தில்
வரலாற்றிலும்
வாழ்விலும்!நாட்டுக்காக
மொழிக்காக
உறவுக்காக
நட்புக்காக
காதலுக்காகவென!

உயிர்
உறவுகள்
உடமைகள்
சொத்துக்கள்
சுகங்களெனப்
பலவற்றின் தியாகம்!

ஆயினும்
ஆயிரமாயிரம்
ஆண்டுகளாய்ப்
போற்றப்பட்டு வரும்
ஒரே தியாகம்
இப்ராஹீம்(அலை)நபி
அவர்களுடையது தான்!

தள்ளாத முதுமையில்
தனக்குப் பிறந்த
ஒரே மகனை
இறைவனின் ஆணையேற்றுப்
பலிப்பீடம் ஏற்றியது!

சுய நலமே சூழ்ந்திருக்கும்
இவ்வுலகில் நாம்
தியாக உணர்வு
பெற்றிட
உணர்த்தும் நாளே
தியாகத் திருநாள்
பக்ரீத்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்
drimamgm@hotmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *