துபையில் பணி வாய்ப்பு – ஒரு பார்வை

  –    முதுவை ஹிதாயத் –   துபை – பெரும்பாலான இளைஞர்களின் கனவு நகரம். உலகில் வளர்ந்து வரும் முன்னணி நகர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் உயர்ந்து நிற்கும் துபையும் ஒன்று. வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்கள் எண்ணெய் வளம் மற்றும் அவை சார்ந்த தொழில்துறை நம்பியிருந்தாலும் துபை எண்ணெய் வளம் சார்ந்த தொழில்துறை மட்டுமல்லாது பல்வேறு பிற தொழில்துறைகளில் உயர்ந்து நிற்கிறது. பன்னாட்டுத் தொழிலதிபர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் முகமாக Free […]

Read More

ஒளிரும் மரங்கள்

  K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர். பாட்டி சொல்லக் கேட்ட பேய்கதைகளும் அப்போது தான் நினைவுக்கு வரும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன? தைவான் நாட்டு விஞ்ஞானிகள் குழுவினர் வேறுவிதமாக சிந்தித்தனர். தெரு விளக்குகளுக்குப் பதிலாக சாலையோர மரங்களே […]

Read More

மனிதனே இது நியாயமா?

நெஞ்சின் நினைவுகளே துயிலெழுங்கள் நெடுந்தூரம் பயணம் செய்யுங்கள் அமைதி எனும் ஒற்றை வார்த்தை அதனை தேடி என்னிடம் கொண்டு வாருங்கள் – (இதோ இனி என் நெஞ்சம்) வீட்டின் வாசலை கடந்தேன் வட்டிக் கும்பலால் குழப்பம் வெளியேறினேன் சாதிக் கலவரம் வெளியூர்களில் மதக்கலவரமாம் தலைவனின் சிலையும் இறைவனின் ஆலயமும் உடைக்கப் பட்டதால் உயிர்க் குஉட்டங்கள் மரணம் நாட்டினைத் தாண்டி எல்லைக் கோட்டில் இளைப்பாரலாம் என்றால் அங்கே பீரங்கிச் சத்தம் எல்லைக் கோடிட்டவர்கள் சில தொல்லைக் கோடுகளையும் இட்டுவிட்டனராம் […]

Read More

வளைகுடா வாழ்க்கை

விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்!   திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்!   தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!   வெள்ளைக் கைலியின் வெளுப்பு மஞ்சளாகு முன்பு முல்லைக் கொடி மனையாளை விட்டும் முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!   பசியாறுதலும் பலகாரங்களும் பளபளப்பு இருக்கும் வரைக்கும் வருகை! ருசியான உணவுகளும் குறையும் ரொக்கத்தின் இருப்பும் அருக!   மீண்டும் மீண்டும் தொடரும் மீளாப் பயணம் வரைக்கும் வேண்டும் […]

Read More

கல்வி

கல்வியானது மேன்மையானது, கல்வியானது உன்னதமானது… கல்வியானது  மேன்மையானது கற்றவர்கள் செல்லுமிடம் சிறப்பு ஓங்குமே கல்லாதார் காணுமிடம் காரிருள்தானே தோண்ட தோண்ட நீரூற்று வருவது போலே கற்க கற்க அறிவூற்று பெருகி ஓடுமே                               [கல்வியானது] கல்வியினை கற்றதனால் செல்வந்தராவார், கல்லாதவர் பணமிருந்தும் ஏழைபோலாவார் செல்வத்திலே சிறந்த செல்வம் கல்வி செல்வமே, மற்றதெல்லாம் அற்ற குளத்தில் அரு நீர் போலே!                                [கல்வியானது] கற்றவர்கள் உயிரின் உயர்ந்த ஜீவன்கள் தானே, கல்லாதார் இருந்தும் இல்லா  இறந்தவர் தானே, கற்றதனால் […]

Read More

ஈமான்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்   சீந்துறு வளம்நெடுகில் தீன்வளம் அருளித்தரு செறிய உய்த்தேகு இறைவ ! சிறியோம் உம்மத்தாம் இம்மன்றத்தார் நின்புகழ் துதித்தோம் ! அருள்வாய் !!     மண்புகழ் அனைத்தும் பொன்றிகழ் வளர்த்து, கண்திரு ஒப்ப கனிவள ஆர்த்து,     மறைவழி தந்த நெறிமுறை அல்லாஹ், சிறுநிறை மன்றம் நின்புகழ் பாட,     பண்பொடு மாந்தர் வண்தகை ஈந்து, வந்தது கண்டு மகிழ்தினம் இன்று.     பார்காணும் படைப்பினில் உயர்வாகும் […]

Read More

வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ) ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா […]

Read More

வாலிப வயதை வீணாக்காதீர் !

           ( முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர் ) ‘’எவருக்காவது பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அழகிய திருநாமம் சூட்டவும். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்கவும். அவர் வாலிப வயதை அடைந்துவிட்டால் அவருக்குத் திருமணம் முடித்து வைக்கவும். பருவம் அடைந்த பின்னரும் (அலட்சியமாக இருந்து) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால் (அதன் காரணமாக) அவன் பாவத்தில் வீழ்ந்து விட்டால் அந்தப் பாவம் அவன் தந்தையையே சாரும்’’   என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் […]

Read More

இதயங்களின் இருப்பிடம் முதுகுளத்தூர்

எத்தனையோ தேசங்கள் இயன்றளவு பார்த்தாகிவிட்டது ஆறோடும் ஊர்களையும் நீரோடும் சோலைகளையும் அருவிபாயும் ஓசைகளையும் அலைபாயும் கடலோரங்களையும் கண்களால் கண்டாகி விட்டது காதுகளால் கேட்டாகி விட்டது எங்களின் இதயத்திற்கு இதமாய் உள்ளங்களின் ஓய்வுத் தலமாய் எங்கள் ஊர்போல் எங்கும் இல என்பேன் சொல்லும்படி ஒன்றும் இல்லை சொல்லா திருப்பதற்கும் இல்லை வறட்சிதான் வறுமைதான் வாழ்வில் தானன்றி இதயங்களில் இல்லை நகரமா என்றால் இல்லை கிராமமா அதுவும் இல்லை இரண்டிலும் இடைப்பட்டது ஏறத்தாழ ஒரு சதுரகிலோ மீட்டர் ஏம் இதயங்கள் […]

Read More

இன்னுமா கைக்கூலி?

 இன்னுமா கைக்கூலி? ****************************************************************************************************************** அல்லாஹ் ஒருவனென         அவன்தூதர் முஹம்மதென சொல்லும் உறுதியினர்@         சுரண்ட நினைப்பதுவோ?       1 ஒப்புக்கோ மார்க்கம்?       ஊருக்கோ உபதேசம்? அப்பழுக்கை நீக்காமல்       அளப்பளக்கும் பேச்செதற்கு?   2 சமுதாய நடுநிலையும்        சன்மார்க்க நெறிமுறையும் அமுதாகும்; அதற்குள்        அழிக்கும் விஷக்கலப்பா?         3 “மார்க்கத்தில் பாதி”$யென         மதிக்கும் திருமணத்தில் பேர்த்துப் பணம்பறித்தல்        பெருங்கயமை ஆகாதோ?         4 நபிவழியாம் திருமணத்தை       நடத்துகையில் அதற்குரிய அபிவிருத்தி%,கைக்கூலி       யாலழுக்காய் ஆவதுவோ?         5 வேசிக்கும் பணம்கொடுப்பார்;          வீட்டு […]

Read More