கண்மணியே !

இலக்கியம் கவிதைகள் (All)

 

உலகத்துக் கவர்ச்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்துக்

கலகத்தை வளர்க்காமல் காத்திடுவாய் கண்மணியே !

ஒழுக்கத்தை உயிரைவிட உயர்வாகப் போற்றிடுவாய் !

அழுக்காறு களைந்திடுவாய் ஆரமுதக் கண்மணியே !

இறைவனின் பேரருளால் இனியவர்கள் துஆப்பேற்றால்

நிறைவான நலன்களுடன் நீவளர்க கண்மணியே !

-இறையருட் கவிமணி கா அப்துல் கபூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *