சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர் !

சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில்  17.08.2013 அன்று முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர்   சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூர் பேராசிரியருக்கு முனைவர் பட்டம் !   கணிதப் புள்ளியலில் முதல் முறையாக முனைவர் பட்டம் பெற்றம் முஸ்லிம் பேராசிரியர் ! ! சென்னை : சென்னை புதுக்கல்லூரியின் கணிதத்துறை இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த வ . கமால் நாசர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறையில் […]

Read More

நமது பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதற் பாட்டு ! : Saare Jahan Se Achcha

1947 _ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் டெல்லிப் பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதல் பாட்டு இதுதான். ஸாரே ஜகா(ன்)(ஸே) அச்சா(ஹ்) ஹிந்துஸ்தா(ந்) ஹமாரா ஹம் புல்புலே(ன்) ஹை(ன்) உஸ்கி ஏ குலிஸ்தா(ன்) ஹமாரா – என்று துவங்க்கும் இந்தப் பாடல் நமது நாட்டின் முதல் பிரதமரான நேருஜிக்கு மிகவும் பிடித்தமான பாடல். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பாடலை நேருஜி தவராமல் பயன்படுத்துவார். இப்பாடலின் பொருள்:- உலகம் யாவினும் சிறந்தது எங்க்கள் ஹிந்துஸ்தான் :  இந்தப் […]

Read More

புறநானூற்று அறிவியல் வளம்

      அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன.  சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச் செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய வைக்கின்றது. சங்க இலக்கியங்களில் […]

Read More

ஈரம்

  என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது !   என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில் உயிர்விட்டபோது பாசமுள்ள என் பெரியம்மா மாரடைப்பில் மரணித்தபோது !   என் உணர்வுகளின் ஈரம், சுனாமிகள் மக்களைச் சுருட்டிச் சென்றபோது, பூகம்பங்கள் மனிதர்களைப் புதைத்துக் கொண்டபோது ! என் கனவுகளின் ஈரம், கிராமத்துப் பள்ளிகளில் ஆசிரியையாக இல்லாதது களையெடுக்கும் அழகைக் கண்டுரசிக்க முடியாமலானது !   என் ஆனந்தத்தின் […]

Read More

கணவன்

  ’கண்’ அவன் என்றதால்தான் கணவன் என்று பெயர்பெற்றாயோ? என்னமாயம் செய்தாயோ? ஈன்றெடுத்தோரை மறந்தேன் !   உண்டுகளித்த உடன்பிறந்தோரை நான்மறந்து போனேன் ! சேர்ந்து படித்த சிநேகிதிகளையும் துறந்தேன் !   கடமை அழைத்ததால் – உன் உடைமையான என்னை தனிமையில் விட்டுவிட்டு அயல்நாடு வந்துவிட்டாய் !   அமைதியிழந்த நான் அனலிலிட்ட புழுவானேன் ! அத்தனை உறவுகளும் அந்நியமாகிப் போயின !   உன்னுடன் நானிருந்தவேளை ஒருநாள் கூட நிமிடமாகியது ! நீயில்லாத நேரங்களோ […]

Read More

தேர்தல்

  –    க.து.மு. இக்பால் –     வாக்களிப்பு எனும் வார்த்தையைக் கண்டு பிடித்தவரை வணங்காமல் இருக்க முடியவில்லை   தேர்தலில் எது இல்லாவிட்டாலும் வாக்களிப்பு கட்டாயம் இருக்கும்   தேர்தலில் ஒருமுறை நாம் வாக்களிப்பதற்காக ஆயிரம் வாக்களிப்புகளை அள்ளி விடுகிறார் அபேட்சகர்   பெரும்பாலும் வாக்களிப்புகளைப் பார்த்து வாக்களிப்பதே நம் வழக்கமாகி விட்டது   தன் வாக்குகள் சிதறிவிடாமல் பார்த்துக் கொள்ளும் அக்கறை அபேட்சகருக்கு தேர்தல் வரைதான்   தேர்தலுக்குப் பின் வாக்களிப்புகள் பெரும்பாலும் […]

Read More

சாதனை

  காரைக்குடி பாத்திமாஹமீத், ஷார்ஜா   வானத்தை வில்லாக வளைப்பது சாதனையல்ல, வறியவர்களின் ஏழ்மையைக் களைவதே சாதனை !   தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது சாதனையல்ல, ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதே சாதனை !   இலவச உணவு எப்போதும் வழங்குவது சாதனையல்ல, இல்லாதாரின் கனவுகளை நனவாக்குவதே சாதனை !   கொடிகட்டிப் பறப்பது என்றென்றும் சாதனையல்ல, ஏழையொருவனுக்கு எழுத்தறிவித்தலே உயர்ந்த சாதனை !   பெண்மையை அடக்கி ஆள்வது சாதனையல்ல, நன்மதிப்புக் கொடுத்து மேன்மை காண்பதே சாதனை […]

Read More

இயற்கையைப் பார்ப்போம் !

காரைக்குடி பாத்திமா ஹமீத், சார்ஜா   மது ஒழிப்புப் போராட்டம் மனிதர்களுக்குத்தான் ! எந்தவண்டும் மதுவுண்ட மயக்கத்தில் யாருக்கும் கஷ்டங்கள் கொடுப்பதில்லை !   சாதிச் சண்டைகள் என்றென்றும் மனிதர்களுக்குத்தான் ! எந்தச் சேவல்களும் மதத்திற்காக சண்டைகள் போடுவதில்லை !   தீண்டாமை என்பது மனிதர்களுக்குத்தான் எந்தத் தென்றலும் யாரையும் தீண்டாமல் விடுவதில்லை !   ஏற்றத்தாழ்வுகள் என்றென்றும் மனிதர்களுக்குத்தான் ! எந்த மழையும் பணக்காரனுக்கு மட்டும் பெய்வதில்லை !   ஏமாற்றுதலும் எதிரிகளும் மனிதர்களுக்குத்தான் ! […]

Read More

நிழலும் நிஜமும்

  என்ன இந்த வாழ்க்கையென்று அலுத்துக் கொள்ளும் வேளைகளில் நிழலான சில காட்சிகள் என்கண் முன்னால் !   அடுத்தவீட்டு வாசலில் அணைத்தகைக் குழந்தையோடு அழுக்கடைந்த உடையோடு அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி ! வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினாள் !   கல்லூரியில் படிக்கும்மகனை காலையில் எழுப்பும்போது கனமான அவன் எதிர்காலம் கண்முன்னே நிழலாக !   தெருவிளக்கின் கீழே திறந்தபுத்தகம் கையோடு தேர்விற்காக படிக்கும் திண்ணைவீட்டுப் பையன் ! வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினான் !   கையில் பெட்டியுடன் […]

Read More

கல்வி

  கல்லாய் இருந்த மனிதனை உயிர்சிலையாய் மாற்றியது கல்வி ! மரமாய் இருந்த மனிதனை உயிர்ச்சிற்பமாய் மாற்றியது கல்வி !   மண்ணாய் இருந்த மனிதனை மாணிக்கமாய் மாற்றியது கல்வி ! மலையாய் இருந்த மனிதனை மரகதமாய் மாற்றியது கல்வி !   காடாய் இருந்த மனிதனை கலை ஓவியமாய் மாற்றியது கல்வி ! பாலையாய் இருந்த மனிதனை சோலைவனமாய் மாற்றியது கல்வி !   பட்டுப்போய் இருந்த மனிதனை பசுமையாய் மாற்றியது கல்வி ! சேற்று […]

Read More