பதறு – இஸ்லாத்தின் திருப்பம்!

இலக்கியம் இஸ்லாமியக் கவிதைகள் கவிதைகள் (All)
— கவிஞர் அத்தாவுல்லா —
அது –
அறிவு
அறியாமையைப்
புரட்டிப் போட்ட நாள் !
சமாதானப் பூக்கள்
ஆயுதம் ஏந்தி
நடந்த நாள்!
அன்று முஸ்லிம்களின்
வாள் உயர்ந்த நாள் அல்ல
ஏகத்துவ இறை மறுப்பின்
தாள் –
பூமியில் புதையுண்ட நாள்!
சிறு கூட்டம்
பெருங் கூட்டத்தை
வெற்றி கொண்ட நாள்அல்ல!
சத்தியமே
வெல்லும் என்பதை
முரசறைந்த நாள்!
பெருங் கூட்டமாய் இருந்தாலும்
அசத்தியம் தோல்வியுறும்
என்று அறிவித்த நாள்!
சிற்றெறும்புகள் சேர்ந்து
மத யானைகளைக்
கொல்ல முடியுமா?
ஆனால் அன்று
அதுதான் நடந்தது!
மனங்களின்
மகத்துவம் வென்றது
மதங்களின்
தளங்கள் தகர்ந்தது!
நபிகள் பெருமானின்
மனக் கண்ணீர்
மக்கத்தின் மாசுகளை
இல்லாமல் ஆக்கியது!
முன்னூற்றுப் பதின்மூன்று
சத்தியத் தோழர்கள்
தங்கள் மூச்சுக் காற்றுகளால்
அந்த புதிய சுவாசங்களை
எழுப்பினர்
இஸ்லாம் மனங்களோடு
பேசும் மகத்தும்
என்றும் அதுதான் வெல்லும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *