பாவேந்தர் பரம்பரை

இலக்கியம் கவிதைகள் (All) திருமலர் மீரான் பிள்ளை

 

எம்.எம்.மீரான். பி.எஸ்.சி

 

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து இரண்டில்

ஆயகலை பலவுணர்ந்து ஆள்வதற் கென்றே

வந்துதித்த “மீரான்” வளர்ந்திடும் வேளை

தந்தையும் தாயும் தரணியில் மாண்டார்.

சின்னவன் என்பினும் சிதைவிலா வண்ணம்

சென்றனன் நல்வழி. சேர்ந்தனன் மேன்மை;

கற்றவர் போற்றிடும் கல்வியும் கேள்வியும்

கற்பனை ஆற்றலும் கவிபுனைந் தாளலும்

மற்றுநற் கதைகளும் மன்றிடை முதன்மையும்

பெற்றுநற் பெருமையும் உற்றனன் உயர்வையும்;

“மின்னல் மீரான்” எனும் புனை பெயருடன்

கன்னித் தமிழுடன் கலந்திணைந் தோங்கினன்

“திருமலர் மீரான்” எனும்புனை பெயரினில்

பெருந்திறல் மிக்கவன் படைத்தவை பலவாம்;

நாடக மாக்கலும் நடித்தலும் திறமுடன்

நாடிக் கலை பல வளர்த்தலும் வென்றவன்;

இந்து முஸ்லீம் இணையநற் பாலமாய்

முந்து புகழுடை மூத்த தமிழினை

இன்ப வாழ்க்கையின் இனிய மூச்செனும்

பண்பு காத்திடும் பாங்கினை வளர்ப்பவன்;

அன்னவன் நல்வளம் நற்புகழ் பெற்றிட

அன்னை தமிழ்த்திரு நாட்டையும் போற்றிட

திண்டி வனக்குயில் திறமுறளார் தம்மினைக்

கண்டுமே வாழ்த்திடக் காண்குவீர் “மீரான் !”

 

நன்றி :

 

குயில் மாத இதழ்

மார்ச் 1973

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *