கவிஞர் வாலி……..! – அத்தாவுல்லா

இலக்கியம் கவிதைகள் (All)

கவிஞர் வாலி……..!

அன்னை தமிழ் மடியில்
குழந்தை போல் தவழ்ந்தவன்
ஆகாயத் தமிழ் வானில்
நிலவுபோல் ஜொலித்தவன்
கண்ணியங்கள் மாறாத
சொல்லெடுத்து வடித்தவன்
கவியரசர் பெயர்போலத்
தன்பெயரைப் பொறித்தவன் !

வதம் செய்த வாலி பெயர்
வகையாகப் புனைந்தவன்
நிதம் காணும் காட்சிகளில்
கவிப்பாகைக்  கலந்தவன்
மதம் கடந்தும் மாற்றாரின்
மனங்களிலே பயின்றவன்
மாநபிகள் பெருமான்மேல்
மரியாதை மிகுத்தவன்!

செந்தமிழின் அமுதெடுத்து
சிந்தைக்குத் தந்தவன்
சேரிகளின் ஊர்ப் புறமும்
சிந்தனையை விரித்தவன்
சொந்தமென  தமிழ் மக்கள்
சிந்தைகளை நெய்தவன்
சாரல் மழை சுகமென்று
தமிழுலகில் பெய்தவன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *