கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

இலக்கியம் கவிதைகள் (All)

 

வெளிச்சத்தில் மட்டுமல்ல

இருட்டிலும்

என்னைத் தொடரும்

நிழல்

 

கருவில் வாங்கிய கடன்

கண்ணை மூடிய பிறகும்

அகல்வதில்லை

 

என் சேமிப்புப் பெட்டி முழுதும்

காலிசெய்ய முடியாமல்

நிரம்பி வழிகிறது

கடன்

 

என் பக்தி

கடவுள் கொடுத்த கடனைத்

தீர்ப்பதல்ல;

புதிய கடனுக்குப் போடும் விண்ணப்பம்

 

கடன் தருவதற்குக்

கடனாளிகளிடம்

என்ன இருக்கிறது?

நமக்குத் தெரிந்ததெல்லாம்

கடனை

இடம் மாற்றி விடுவதுதான்

 

உடல் சுமப்பது

உயிரையல்ல;

கடனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *