நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகள்

மருத்துவக்குறிப்புகள் மருத்துவம்

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும்
ஒன்று. எய்ட்ஸ் கான்சர் போன்றவற்றை விட பாடாய் படுத்திக்கொண்டிருக்கும்
கொடிய நோய் இச்சர்க்கரை வியாதியென்றே கூறலாம்

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி பசி உண்டாகும்.
நாவறட்சியேற்படும். உடல் சோர்வாகக் காணப்படும். அடிக்கடி சிறுநீர்
பிரியும். கால் கை மரத்துப்போகும்.கண் பார்வை மங்கலாகும்..உடல் எடை
கூடிக் குறையும். மன உளைச்சல் ஏற்படும். உடலிலேற்படும் காயங்கள் நீண்ட
நாட்களுக்கு ஆறாமலிருக்கும்

இவர்கள் அடிக்கடி இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக்கொள்வது
நல்லது. நீரழிவை நம்மால் தான் கட்டுப்படுத்த முடியும். எந்த மருந்துகளும்
செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது. உணவின்
தன்மை அறிந்து வகையறிந்து அளவோடு உண்ண அதுவே அற்புத மருந்தாய் வேலை
செய்யும்.

நீரழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட உகந்த சில காய் கறி வகைகள்…
வாழைப்பூ. வாழைத்தண்டு. முட்டைக்கோஸ். கத்தரிப்பிஞ்சு. வெண்டைக்காய்.
முருங்கைக்காய். புடலங்காய்.பாகற்காய். பீர்க்கம் பிஞ்சு. அவரைப்பிஞ்சு.
இவற்றை சம்பல் செயதோ அல்லது கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

இவர்கள் தினமும் ஒரு கீரை வகையேனும் உணவில் கலந்துகொள்ளவேண்டும்.
பொன்னாங்காணி வெந்தயக்கீலை. வல்லாரை. புதினா. கொத்தமல்லிக் கீரை போன்றவை
மிகச் சிறந்தவை.

இவர்கள் தவிர்க்க வேண்pடயவை…

சர்க்கரை. இனிப்பு வகை. சேணைக்கிழங்கு. மாம்பழம்.குளிர்பானங்கள். கரட்.
பீட்ரூட் குறைந்த அளவில் சாப்பிடலாம்..

முக்கியமாக நடைப்பயிற்சி மிகச்சிறந்ததும் அவசியமானதுமாகும். ஆரம்பத்தில்
20 நிமிடங்களாக ஆரம்பித்து படிப்படியாகக் கூட்டிக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *