நம்பிக்கை தான் வலிமை.!

இலக்கியம் கவிதைகள் (All)

 

                                             திருச்சி   A.முஹம்மது அபூதாஹிர், தோஹாகத்தார்                              

 

 

இங்கு
கம்பெனியில் நுழைவுச்சீட்டு
சான்றிதழ் படிப்புதான்..,
எனினும்
சான்று பகர்வது
உன்னை சிறந்தவன் என்று
உன் கடின உழைப்புதான்…!

நம்பிக்கை தான் வலிமை..,
நம் கைகள் அதனை வழிமொழிகிறது….!

போராட்டங்கள் மட்டும்

நடக்காதிருந்தால்

நாடுகள் இன்னும்

அடிமைத்தனத்திலேயே இருந்திருக்கும்..!

ஆராய்ச்சிகள் மட்டும்

செய்யாதிருந்தால்

உலகம் இன்றும்

இருளிலேயேஇருந்திருக்கும்..!

முயற்சி மட்டும்

 

மனிதன் செய்யாமல்இருந்திருந்தால்
முழு உலகமும்

முட்காடுகளாகவே நிறைந்துஇருந்திருக்கும்..!

கஷ்டங்கள் வாழ்வின்

கெட்ட காலம் அல்ல,
பத்து மாத கஷ்டம் தான்

ஒரு பெண்ணை அன்னையாக்குகிறது..!

முட்களுக்கு நடுவே தான்

ரோஜாக்கள் பூத்து வந்திருக்கின்றன ..,
வாட்களுக்கு நடுவே தான்

ராஜாக்கள் ஆட்சியை காத்துவந்திருக்கிறார்கள்..!

நம் விடியல்கள்

நம்பிக்கையோடு இருக்கட்டும்..,
பொழுது புலரும் முன்

நம் கைகள் பணியை செய்துமுடித்திருக்கட்டும்..!
Writer Mail id
thahiruae@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *