பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)
பற்றி எரிகிறது
…பாலஸ்தீன் காசாவில்
வெற்றிக் கிடைத்திடவே
…வேண்டும்தீன் நேசர்காள்!

காலமும் காணாக்
…காட்சித்தான் பின்ன
பாலகர் செய்த
… பாவம்தான் என்ன?

கொடுமையிலும் கொடுமை
…கொலைசெயுமிவ் வன்மை
கடுமையுடன் தடுத்தால்
…களைந்துவிடும் தீமை

இறைவனின் கோபம்
….இஸ்ரவேலர் அடைவர்
விரைவுடன் தீர்ப்பு
…வந்திடவும்; மடிவர்

இறுதிநாள் வருகைக்கு
….இக்கொடுமை ஒருசான்றா?
உறுதியாய்க் கொடுமைக்கு
…உள்ளமெலாம் உருகாதா?

கொத்துக் கொலைகண்டு
…குழந்தைகள் நிலைகண்டு
கத்தும் கடல்கூட
…கதறுமே பழிதீர்க்க

தீர்ப்புநாள் வராதென்று
….தீதைச் செய்தாயோ?
யார்க்குமே அடங்காத
…யூத ஷைத்தானே!

அர்ஷில் எட்டும்
….அலறல் சத்தம்
குர்ஸி தட்டும்
…குழந்தை ரத்தம்

பாதிக்கப் பட்ட
…பாலஸ்தீன் மக்கள்
நீதிக்கு முன்பு
…நிற்கின்ற வேளை

கூட்டுச் சதியால்
..கூடிக் குலாவி
வேட்டு வெடித்தல்
..வேடிக் கையே!

பொய்நாக் கூட்டம்
…புரிய வில்லையா?
ஐநா சபையோர்
…அறிய வில்லையா?


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச் சோலை)
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *