அஜ்மானில் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம்

தற்போதைய செய்திகள்

அஜ்மான் : அஜ்மானில் தாய்மண் வாசகர் வட்டம் அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி சிறப்புக் கருத்தரங்கத்தை 20.04.2012 வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அம்பேத்கர் பிறந்த தின சிறப்புக் கருத்தரங்கிற்கு தாய்மண் வாசகர் வட்ட தலைவர் செ.ரெ.பட்டணம் மணி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவர் தனது உரையில் இந்திய அரசியல் சட்டமேதையினை பின்பற்றி வரும் நீங்கள் அவர் விரும்பும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திடும் முடிவை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது என்றார்.

மேலும் அம்பேதகர் குறித்து கவிமதி தயாரித்த தொகுப்பை கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது வெளியிட முதல் பிரதியினை கருணாநிதி பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

அம்பேத்கர் குறித்தும் அவர்தம் அரசியல், சமூகப்பணி, அர்ப்பணிப்பு குறித்தும்ஃபாருக், குத்தாலம் அஷ்ரப் அலி, ஸ்டாலின், ஏ.முஹம்மது தாஹா, மற்றும் பலரும் அம்பேத்கரியம் ஒரு பார்வை என்கிற கருத்தரங்கிற்குதிரு. கருணாநிதி தலைமையேற்க அம்பேத்கரிம் குறித்து ஆசிஃப்மீரான்,குறிஞ்சிதாசன், கவிமதி, அசோக் மற்றும் பலரும் கருத்துரையாற்றினார்கள்

செயலாளர் முத்தமிழ் வளவன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *