ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராக அழைப்பு

அ. அலுவலகங்கள் உள்ளுர் தாலுகா அலுவலகம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் கருவூல அலுவலர் நாகராஜன் கூறியதாவது: ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் உள்ளனரா, உண்மையான தகுதியுடைய வாரிசுதாரர்கள் தானா என்பதை ஆய்வு செய்யவும், ஓய்வூதியத்தை மாற்று நபர்கள் பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
இதனால் கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் இன்று முதல் ஜூலை 30க்குள் முதுகுளத்தூர் கருவூல அலுவலகத்தில் தங்களது போட்டோ, பென்சன், வங்கி புத்தகங்களை நேரில் காண்பித்து, கணக்கை புதுப்பித்து கொள்ள வேண்டும், தவறினால் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *