வறுமைக் கோடு

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

வலியோ ரெளியோர் மீதினிலே
வகுத்து வைத்தக் கோடாகும்
பலியாய்ப் போகு மெளியோரும்
பயமாய்ப் பார்க்கும் கேடாகும்

வேலி தாண்டி வரவியலா
விரக்தித் தருமே இக்கோடும்
நீலிக் கண்ணீர் வடிக்கின்ற
நீசர் செய்த பெருங்கேடாம்

கானல் நீராய் வாழ்நாளும்
கனவாய்ப் போய்தா னழிந்தது
வானம் பார்க்கும் பூமிதானே
வறுமைக் கோடு வழங்கியது

இருளில் வாழ மின்வெட்டில்
எல்லார் வீடும் சமமாக!
பொருளா தாரக் கோட்டிற்றான்
பெரிய விரிசல் பாகுபாட்டில்

“கவியன்பன்” கலாம்

0508351499

http://www.kalaamkathir.blogspot.com/

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
அலை பேசி: 00971-50-8351499

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *