கவிதை பாடுவோம்

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்;
நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்;
புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்!
உலகில் மொழிகள் வேறாம்; உணர்வு என்றும் ஒன்றாம் !

திசைகள் வேறு வேறு; தெரியும் இலக்கு ஒன்றே
அசைக்கும் நிலையில் பாடும் அனைத்து மொழிகள் கவியும்
விசையாய் இயக்கும் மனதில் விந்தை கண்டால் புரியும்
தசையும் உடலும் சிலிர்க்கத் தானாய் மூளை விரியும்

வானின் பரப்பை மறந்து வண்ணப் பறவை காண்போம்
தேனின் சுவைக்கு நம்மைத் தீண்டும் தேனீ அறியோம்
மீனின் சுவைக்கு வேண்டி மீண்டும் தூண்டில் இடுவோம்
தானில் உணரும் ஞான தவம்போல் கவிகள் காண்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *