துபாய் முதுவை சங்கமம் 2011 : தலைமை இமாம் வாழ்த்து

ஐ. மு. மு. ஜமாஅத் முதுகுளத்துார் முஸ்லிம் ஜமாத்

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் முதுவை சங்கமம் 2011 சிறப்புற நடைபெற துஆச் செய்வதாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மௌலவி எஸ். அஹமத் பஷீர் சேட் ஆலிம் தெரிவித்துள்ளார்.

குல்பர்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இத்தகவலை இணைய வழியே தெரிவித்தார்.

முதுகுளத்தூர் தெக்கூர் பெண்கள் பள்ளிவாசல் கட்டிடப்பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவுறும். அப்பணி நிறைவுற்றதும் பள்ளி திறப்பு விழாவில் அமீரக ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொண்டார்.

ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை தலைவர்

மலேஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவருமான முதுவைக் கவிஞர் மௌலவி அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் ஆலிம் மன்பயீ அவர்களும் முதுவை சங்கமம் 2011 சிறப்புற நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல் அறக்கட்டளை பொருளாளர் ஏ. காதர் முஹைதீன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *