அணைக்கட்டு அன்பை அணைக்கட்டும்

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

’முல்லைப் பெரியாறு’

சொல்லிப் பாரு

நற்றமிழ்ப் பேரு
நம்மை ஏய்ப்பது யாரு?
உடைக்க நினைப்பது
ஒற்றுமை உணர்வுகளை
தண்ணீரை வைத்து
தானியம், காய்கறி
அரிசியும் பயிரிட்டாயா
அரசியலைப் பயிரிடுகின்றாய்
அண்டை மாநிலமே
அரிசியும் பருப்பும் தந்தும்
சண்டைப்  போட்டே
சகோதர்களின்
மண்டை ஓட்டை வைத்து
மல்லுக்கு நிற்கின்றாய்
உடைப்பதில் தான்
இடைத்தேர்தல் வெற்றி
கிடைப்பதென்பது 
மடையர்களின் சூழ்ச்சி
தமிழின் உதிரமாய்
உன்றன் மொழியும்
தமிழனின் உதிரமும்
தட்டிப் பறிக்கின்றாய்
உன்றன் பூமியில்
உள்ள சாமியைத் தேடி
உன்றன் பூமிக்கு வந்தவன்
உதிரம் குடிக்கும் நீயும்
உலக மகா அறிவிலி
அணைக்கட்டாதே
அன்பால் எம்மை
அணைக்கட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *