துபாயில் நடைபெற்ற முதுவை சங்கமம் 2011

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் முதுவை சங்கமம் 2011 எனும் நிகழ்ச்சி 31.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயல் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், துணைத்தலைவர்கள் எஸ். சம்சுதீன், ஏ. ஜாஹிர் உசேன், முதுவை ஹிதாயத், எஸ். அமீனுதீன் ஆகியோர் முன்னிலை […]

Read More

துபாய் முதுவை சங்கமம் 2011 : தலைமை இமாம் வாழ்த்து

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் முதுவை சங்கமம் 2011 சிறப்புற நடைபெற துஆச் செய்வதாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மௌலவி எஸ். அஹமத் பஷீர் சேட் ஆலிம் தெரிவித்துள்ளார். குல்பர்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இத்தகவலை இணைய வழியே தெரிவித்தார். முதுகுளத்தூர் தெக்கூர் பெண்கள் பள்ளிவாசல் கட்டிடப்பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவுறும். அப்பணி நிறைவுற்றதும் பள்ளி திறப்பு விழாவில் அமீரக ஜமாஅத் […]

Read More

ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி !

அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !! துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் உள்ளிட்ட கருத்துக்களில் உரை நிகழ்த்தலாம். […]

Read More

டிசம்பர் 30, துபாயில் முதுவை சங்கமம் 2011

  துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுவை சங்கமம் 2011 இன்ஷா அல்லாஹ் 30.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், அபுதாபி கஸ்ஸாலியின் தகப்பனார் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். இந்நிகழ்வில் முதுகுளத்தூரைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் […]

Read More

’தக்வா’ எனும் இறையச்சத்தின் பலன் ——— பேகம்பூரி

    ”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதற்காக, உங்களை பல கிளையினராகவும், பல கோத்திரங்களாகவும் நாம் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியம் பெற்றவர் தக்வா (இறையச்சம்) உள்ளவர்தாம். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நன்கு உணர்பவன்.” (49:13)   மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட பின் ஹலரத் பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும்படி கூறினர்.  அதைக் கண்ட சிலர் […]

Read More

ஓய்வு கேட்க்கும் கனவு

ஓய்வு கேட்க்கும் கனவு. கனவுக்கும் உணர்வுண்டு கண்களைவிட்டுச் செல்லாதே! காண்பதெல்லாம் கனவென்று கண்களும் சொல்லாதே! விழிகள் விழித்திருக்க வெருங்கனவு காணாதே! வெளிச்சத்தை விட்டு விட்டு வேறொரு இருளுக்குள் போகாதே! கனவுகள் மெய்படும்வரை காட்சிகளும் நகராதே! கனவுகள் தேயும்வரை கருவிழியும் சடைக்காதே! காலங்கள் தீரும்வரை கனவுகள் ஓயாதே! கனவுகளும் ஓயாதே கல்லரைக்கு போகும்வரை! அன்புடன் மலிக்கா

Read More

சென்னையில் ஜாஹிர் உசேனுக்கு ஆண் குழந்தை

சென்னையில் ஜாஹிர் உசேனுக்கு ( Ex – ETA PPD ) ஆண் குழந்தை 24.12.2011 சனிக்கிழமை பிறந்துள்ளது. தகவல் உதவி : ஹெச். இப்னு சிக்கந்தர்

Read More

அன்றும் இன்றும்

அன்று: கன்னத்தில் முத்தமிட்டு கட்டியணைத்து உச்சிதனை முகர்ந்து உச்சந்தலையில் ஓதி சென்றுவா மகனே ”வென்றுவா மகனே” என்றுதான் புகழந்த தாய் அன்றுதான் கண்டோம் இன்று: “ஏழு மணியாச்சுடா எழுந்து வா சனியனே” கோபத்தில் வாயைக் கொப்பளித்து சாபத்தில் காலைச் சாப்பாட்டை அளித்து விரட்டியடிக்கும் வீரத்தாய்(?) இன்று அன்று: தாய்பாடும் தாலாட்டும் நோய்போகும் நல்மருந்தும் வாய்பாடும் மனக்கணக்கும் வாய்த்தது நமக்கு அன்று இன்று: தொடர்நாடகம் தருகின்ற தொல்லைக் காட்சியும் பக்கவிளைவுகளின் பக்கமே இழுக்கும் மருந்தும் கணிதப்பொறி,கைப்பேசி, கணினிகளால் மனக்கணக்கும் […]

Read More

மருந்து வாங்கும் போது… எச்சரிக்கை!

மருந்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம். 1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்! தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன… கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். […]

Read More

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!

  பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. […]

Read More