முதுகுளத்தூரில் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா – எம்.எல்.ஏ. முருகன், டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

அ. அலுவலகங்கள் உள்ளுர் கால்நடை அலுவலகம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் பயிற்சி மற்றும் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா 20.08.2011 சனிக்கிழமை கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு. முருகன் அவர்கள் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் 4000 ஐ வழங்கி கௌரவித்தார்.

முதுகுளத்தூர் திடலைச் சேர்ந்த முஹம்மது யூசுஃப் மகன் தாஹிர் ஹுசைன் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிக்கான விருதினையும், கீரனூர் அருகேயுள்ள தேவர் ஆத்திகுளத்தின் பெரியசாமி மகன் தங்கச்சாமியும் முறையே 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கான விருதினையும், ரொக்கப்பரிசினையும் பெற்றனர்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

விருது பெற்ற விவசாயிகளை முதுகுளத்தூர்.காம் வாழ்த்தி மகிழ்கிறது

தகவல் உதவி : டாக்டர் சுந்தரமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *