முதுவை நல்லாற்றல் வாழ்க

இலக்கியம் உள்ளுர் ஐ. மு. மு. ஜமாஅத் கவிதைகள் (All) முஸ்லிம் ஜமாத் விருதை மு. செய்யது உசேன்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 

 

மெட்டு;-மறவேனே எந்த நாளும், 

 

இறையோனின் அருளினாலே,

முதுவை நல்லாற்றல் வாழ்க,

இறையோனின் அருளினாலே!

 

பதமான பாச பிணைப்பால்,

தரமான மேன்மை செயலால்,

இதமானசேவை புந்தோர்,

இனிதான முதுவை சான்றோர்,

இந்நாளின் மகிழ்ச்சியிதுபோல்,

எந்நாளும் மகிழ்ந்து வாழ்க!

                                [இறையோனின்]

அறமான படிப்பு தரவே,

அரும் பாடு பட்டு உழைத்தோர்,

பொருளாலும் முற்ச்சியாலும்,

சிறப்பான கல்வி தந்தோர்,

பொது சேவை புரிந்த நல்லோர்,

பெரு வாழ்வு பெற்று வாழ்க,

                                 [இறையோனின்]

அணி சேர்ந்து இணைந்து வாழ்க,

பணி மேலும் சிறந்து வாழ்க,

கணி தறிவு உயர்ந்து வாழ்க,

புனிதங்கள் கூடி வாழ்க,

மணி மகுட முஹம்மத் தீனில்,

மகுடங்கள் சூடி வாழ்க!

                                 [இறையோனின்]

ஆக்கம் : விருதை மு செய்யது உசேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *