ஈத் பெருநாள் வாழ்த்துகள்​ !

வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள் வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள் வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள் ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்   மதங்கள் கடந்த மாண்பு கொண்டு நல்லிணக்கம் நட்புணர்வு ஈகை வளர்த்து உடலுக்கு ஒருமுறை புத்துணர்ச்சி அளித்து உள்ளமெலாம் பூரிப்பை விதைக்கும் நன்னாள்!   பசியின் தாக்கம் அறிய வைத்து தாகத்தின் ஏக்கம் உணர வைத்து புலன்களின் ஆக்கம் கட்டுக்குள் வைத்து புலப்படா புண்ணியங்களை அள்ளிவரும் பொன்னாள்!   […]

Read More

ரமளான் – ஒரு பயிற்சிப் பட்டறை

  நோன்பே, நீ எல்லாத் தீமைகளுக்கும் எதிரான கேடயம். உன்னை அரியாதவர்க்கோ புதிரான பொருள் ! புனிதர்களாக்கி, மானிடருக்குப் புத்துணர்ச்சியும் அளிக்க ஹிரா மலையிலிருந்து கிளம்பிய அருவி நீ இறையருள் மழையின் ஈர்ப்பு விசை நீ தீமையின் தேசங்களில் ஷைத்தான்கள் எழுப்பும் கோட்டைகளை மூழ்கடிக்கும் கடல்கோள் நீ அறத்திற்கு முரணானவற்றைத் தடுத்து ஆன்மீக அரணாகி நிற்கும் அற்புதம் நீ ! இறைவனை உடம்பால் வணங்கினோம் உளத்தால் வணங்கினோம் உரையால் வணங்கினோம் உயிராலும் வணங்க வைத்த உபதேசி  நீ […]

Read More

யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி

யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால் தேன்குடித்த  வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந்      தபள்ளி யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி   காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை கண்டேனே சாதிமத பேதமற்ற சமத்துவமேக் கொண்டேனே ஆதியிறை ஞானமுள்ள ஆசானைப் பெற்றேனே நீதிக்கதைகள் மூலம்தான் நெறிமுறைகள் கற்றேனே   தமிழ்வழியிற் கற்றாலும் தரமான ஆங்கிலமும் அமிழ்தெனவே ஊட்டியதால் அயல்நாட்டிற் பிழைக்கின்றோம் இமைகள்தான் கண்களையே இயல்பாகக் காப்பதுபோல் சுமையாகக் கருதாமல் சுகமாகக் கற்பிக்கும்   தியாகமுள்ள ஆசான்கள் திகழ்கின்ற பள்ளியாகி […]

Read More

அரும் ம‌ல‌ர் வாச‌ வாழ்த்துக்க‌ள்!

அரும் ம‌ல‌ர் வாச‌ வாழ்த்துக்க‌ள்!                       உல‌க‌ம் போற்றும் உப‌வாச‌ம்,                                              உத்த‌ம‌த் த‌ன்மையை உருவாக்கும்!                  விலைக‌ள்  இல்லா  ந‌ன்மைக‌ளை,                                                வாரி  வ‌ழங்கி  ந‌ல‌மாக்கும்!                    தாக‌ம்  ப‌சியைத்  த‌ன்ன‌ட‌க்கித்,                                              த‌லைவ‌ன்  க‌ட‌மை  நிறைவேற்றி,                  வேக‌ம்  கொண்டு  க‌ட‌மைக‌ளை                                             விதைத்த‌  முதுவை  முஸ்லிம்க‌ளே!                                       அருளும் பொருளும் உண்டாக‌!                                                                                     அழ‌கிய‌ சுவ‌ர்க்க‌ம் உண்டாக‌!                                       க‌ருணைக் க‌ட‌லாம் அல்லாஹ்வின்                                                   க‌னியும் இனிமை உண்டாக‌!                                       […]

Read More

ஈமானிலே ………

அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை            ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக          இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள் கரைந்தோடவே- இந்தப்         புனிதரமலானில் நோன்பை நோற்பீர்களே கல்லான உள்ளங்கள் கசிந்திடுமே – அந்தக்         கஃபாவில் ஹஜ்ஜை செய்வீர்களே சொல்லாலும் செயலாலும் ஒன்றான – நமது         சுந்தரநபி வழியே நன்றானது வல்லான் வகுத்திட்ட குர்-ஆனிலே – நல்ல         வலிமை ஊட்டும் ஈமானிலே     […]

Read More

சென்றுவா ரமலானே

புடம்போட்டத் தங்கமாய்ப் புத்துணர்வை யூட்டி தடம்புரளா வாழ்வுக்குத் தக்கவ்ழி காட்டி கடந்து பயணிக்கும் கண்ணிய மாதம் நடந்து முடிந்த ரமலானின் தேர்வில் கடமை முடித்தோம் கருணை வரவால் உடனிருந்தாய் எங்களுடன் உண்மைத் தோழா விடைபெறு முன்னை விழிநீர் சுரந்து மடைதிறக்கச் சொல்வேன் மகிழ்வுடன் சென்றுவா         யாப்பிலக்கணம்: இயற்றரவிணைக் கொச்சகக்கலிப்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com                                        shaickkalam@yahoo.com […]

Read More

தமிழின் பொற்காலம்

தமிழின் பொற்காலம் (சென்னையில் -1968  நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் “தமிழின் பொற்காலம்” என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை) மூத்த மொழி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. ” வண்ணமும் கண்ணமும்” என்ற இந்த இரண்டு […]

Read More

தாருல் இஸ்லாம்

”தாருல் இஸ்லாம்” பத்திரிகையின் 38வது ஆண்டுத் தொடக்க இதழில் (1957 ஜனவரி), பா.தாவூத் ஷா தனது வாழ்க்கைக் குறிப்பை சுருக்கமாக வரைந்திருந்தார்.     கி.பி. 1885-இல் கீழ்மாந்தூர் என்னும் (தஞ்சை ஜில்லா) மண்ணியாற்றங் கரையிலுள்ள குக்கிராமம் ஒன்றிலே நான் பிறந்தேன். என் 18-ஆவது வயதிலே மெட்ரிகுலேசன் பரிட்சைக்கு போகும் தறுவாயில் என் தந்தையை இழந்தேன்.   1908-ஆவது ஆண்டில் சென்னையில் மணம் புரிந்து கொண்டு, எப்.ஏ. பீ.ஏ. பரிட்சைகளில் தேறினேன். தமிழில் மதுரைத் தமிழ்ச் சங்கப் […]

Read More

நம்பிக்கைதான் நமக்கான வாழ்க்கை!

மண வாழ்க்கை என்பது புயல் காற்று வீசும் கடலில் பயணம் செய்வது போன்றது. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப சமாளித்து கடலில் கப்பலை செலுத்தும் சிறந்த மாலுமி போல வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை சமாளித்து வெற்றி பெற வேண்டும். ‘அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது’ என்பார்கள். கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி – மழை மிரட்டிப் பார்க்கும். இது போன்ற கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்… அவர் […]

Read More

பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும்

1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?   2) இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார் விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?     3) பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய் காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்   […]

Read More