ரயில் பயணங்களில்

இலக்கியம் கவிதைகள் (All)

அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு
அசையும் எல்லாக் கைகளிலும்
அப்பிக்கொள்கிறது பிரிவு.

பதிந்து வைத்த இருக்கையெனினும்
பரபரப்பாய்த் தேடியலைந்து
கண்டடையும்போது பரவும் நிம்மதி.

நடன லயத்தில் நகரும் பெட்டியில்
இடறி நடப்பவர்கள் இடைவிடாது
விதைக்கிறார்கள் மன்னிப்பை.

காலை ரயிலில் சாப்பிடுபவர்கள்
அருகில் இருப்பவர்களுக்கு
ஊட்டுகிறார்கள் பசியை

எல்லாப் பயணங்களோடும்
ஓடும் ரயில் பெட்டிகளுக்கு
உள்ளேயே
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடும் ஏதாவதொரு குழந்தை
மறக்கவைக்கிறது வயதை.

– ஈரோடு கதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *