பிரசவ வலி

இலக்கியம் கவிதைகள் (All)

இணையதளத்தில் கண்ட கவிதை!!

பரிகாசங்களுக்கு

நடுவேத் திணறி;

புன்னகையில்

பூரித்தப்போதும்;

சிலிர்த்து நின்ற

 என்மயிற்கால்களால்;

நிற்கத் துணிவிழந்த

என் பாதங்கள்

பிரசவத்தை எண்ணி!

வலியெடுத்த

என் இடுப்பினால்

விழிப்பிதிங்கி

நான் சரிய;

உறவுகள்

மருத்துவமனையில்

காவல்காரர்களாய்!

முள் குத்தினாலும்

திட்டித் தீர்க்கும்

என் வாய்;

துடித்த வலியால்

கதறினாலும்;

மனம் வரவில்லை;

கருவில்

ஒளிந்திருக்கும்

உன்னைக் கரித்துக்கொட்ட!

விழிகள் இருண்டு;

உதடுகள் வறண்டு;

உள்ளம் மிரண்டு;

குரலுக்குள் மிச்சம்

வைத்தஒசையையும்

கொட்டித்தீர்த்து;

விரல்கள் வியர்வையில்

நனையவழிந்தோடும்

கண்ணீர்கள்காதோடு

ஏதோ இரகசியம் பேசக்;

கட்டுப்பட்ட

கரங்கள்

மருத்துவச்சியின்

பலத்திற்கு முன்!

என் வலிகள்

உன் அழுகைக்கு

முன்பலியாக;

அழுத என் விழியும்

அசதியில் அயர்ந்துவிட;

விழித்துப் பார்க்கையில்

மலர்ந்த என் முகம்;

. தகவல் :

 காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075
தற்போது – ருவைஸ், அபுதாபி..
00971 50 2519693
kmaindhan@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *