இறைவன் படைப்பில் …………

இலக்கியம் கவிதைகள் (All) விருதை மு. செய்யது உசேன்

இறைவன் படைப்பில் பாருலகம் தொடக்கம் – அதில்

உயிர்கள் கோடி உன்னத தொடக்கம்

மாண்பாய் மனித ஜனனம் தொடக்கம்

மானிட வெற்றிக்காய் தீன்வழி தொடக்கம்

பாருலகம் மறுமைக்காய் படிக்கும் பள்ளியே – அதில்

நன்மை தீமை பிரித்து காட்டும் பாடமும் மறையே

சொல்லித் தந்த ஆசானும் அண்ணல் இரசூலே

பரிட்சை எழுதும் நேரமது உலக வாழ்க்கையே

முடிகின்ற இம்மைக்காக பெரிதும் உழைக்கிறோம் – அறிது

முடிவுறாத மறுமைக்காக உழைக்க மறுக்கிறோம்

இறைவன் கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டாலோ

திரும்ப நமக்கு நொடி பொழுதும் கிடைத்திடமாட்டா

செல்வத்தாலும் மக்களாலும் இறைவன் சோதிப்பான் – நம்

சொந்தம், பந்தம், சுற்றம், நட்பு கொண்டு சோதிப்பான்

பற்று,பாசம், நேசம், ஓர்மை இறைவன் மீதானால்

அற்று போகும் உலக மாயை மறுமை செழிக்குமே

விருதை மு. செய்யது உசேன்

துபாய் ( 050 490 83 82 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *