அருளாளன் தந்த நல் இஸ்லாம்

இலக்கியம் கவிதைகள் (All) விருதை மு. செய்யது உசேன்

அருளாளன் தந்த நல் இஸ்லாம்

ஆதம் ஹவ்வாவின் ஆரம்பம் இஸ்லாம்

இப்றாஹிம் நபி தியாகம் இஸ்லாம்

அண்ணல் இரசூலின் வழிமுறையே இஸ்லாம்

சாஸ்திர சீர் கேடு இல்லை

கெட்ட நேரமும் சூலமும் இல்லை

காலங்கள் எல்லாமும் நன்றே – என்று

சொல்லிடும் மார்க்கம் தான் இஸ்லாம்

ஜாதிகள் தீண்டாமை இல்லை

ஏற்ற தாழ்வுகள் பேதங்கள் இல்லை

எல்லோரும் ஓர் மக்கள் தானே – என்று

சொல்லிடும் மார்க்கம் தான் இஸ்லாம்

மூடப்பழக்கங்கள் இல்லை

மூடி மறைக்கின்ற விஷயங்கள் இல்லை

நீதி நெறி வழி செல்லும் – அறிவு

ஜீவித மார்க்கம் தான் இஸ்லாம்

பல தெய்வ வழிபாட்டை விடுத்தே

ஏக வல்லோனை அன்றாடம் தொழுதே

இறையோனுக்கிணையில்லை என்றே

இருள் கலைந்திட்ட மார்க்கம் தான் இஸ்லாம்

விருதை மு. செய்யது உசேன்

துபாய் ( 050 490 83 82 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *