தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்
 
 
தோல்வி கண்டு துவளுகின்ற
          தோழா நீயும் மிரளுவதேன்
ஆல்போ லுள்ளத் துணிவுடனே
        ஆழ மெண்ணம் பதிந்திடுவோம்
வேல்போல் கூர்மை அறிவுடனே
       வேகம் காட்டி முயலுவதும்
நூற்கள் யாவும் பயிலுவதும்
      நுட்பக் கல்வித் தெளிவதுமே
 
வேலை இல்லை; திகைத்தலின்றி
         வேலை ஒன்றைத் துவங்கிடுவோம்
காலை மாலை உழைத்திடுவோம்
         காலம் தன்னை மதித்திடுவோம்
*பாலை நீராய்க்* கருத்திலிடு
        பாழாக் காத பயிற்சியெடு
சோலை யாகச் செழித்திடுமே
        சோம்பல் போர்வை ஒழித்திடவே
 
குறிப்பு: *பாலை நீராய்= பாலைவனத்தில் கிட்டும் தண்ணீர் போல் கருதி வாழ்வைப்  பாழாக்காது வாழ்தல்
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டம் உலா வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *