வாய்ப்பும்; வியப்பும்

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

விளம் மா தேமா   என்ற வாய்பாட்டில் அமையும் விருத்தம் 
 
 
 
உறைவிடம் உணவு தந்து
            உடுத்திட உடையும் தந்த
இறைவனை மறந்து நீயும்
            இருத்தலின் வியப்புக் கண்டேன்
மறைவுட னிருந்தே காத்து
           மறைதனில் விளக்கம் காட்டும்;
குறைகளி லிருந்து நீங்கும்;
          குயவனை மறுத்தல் கண்டேன்!!
 
திரைகடல் புயலில் சிக்கித்
         திணறிய பொழுது நாமே
விரைவுடன் விளித்துக் கேட்டால்
        வியந்திடு  மருளால் காப்பான்
கரைதனை அடைந்த நாமே
        கடவுளை மறந்து விட்டால்
வரைமுறை கடந்த தீமை
        வலைதனில் விழுந்த பாவி
 
பொருளினை வழங்கிப் பார்த்தும்;
         பொழுதினி லழித்துப்  பார்த்தும்;
அருளினை அழகாய்த் தந்தும்;
        அழுகிட இறப்பு தந்தும்;
கருவினில் குழந்தை தந்தும்;
       கடலினா லழிவை தந்தும்
ஒருவனாய் இயங்கும் சக்தி
      ஒருமுறை வியந்து போற்று
 
 
         
 ”கவியன்பன்”கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டம் உலா வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *