விடுதலைத் திருநாள்!!

இலக்கியம் கவிதைகள் (All)

விடுதலைத் திருநாள்!!

காந்தி நேரு சுபாஷ்சந்திரபோஸ் என
கோடிக் கணக்கானோர்
அடி பட்டு உதை பட்டு
மிதி பட்டு இரத்தம் சிந்தி
எண்ணில்லா தியாகங்கள் செய்து
பெற்ற சுதந்திரம் என்னும் விதை!

அவர்கள் விதைத்துச் சென்றார்கள்!
இன்று நாம் விளைச்சலை
ஆண்டு அனுபவித்து
விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்
அது இனிமையான தென்றும்
கசப்பான தென்றும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

நன்றி:முத்துக்கமலம்.
 

 
 
அன்புடன்,
இமாம்.
 
http://thamizheamude.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *