வெள்ளை அறிக்கை

இலக்கியம் கவிதைகள் (All)

வெள்ளை அறிக்கை.
—————————-

இயற்கையின் வீச்சு
மழுங்கி விட்டது.
பேரிடி மின்னலுக்குப் பிறகு
கொஞ்சம் மட்டும்.
பருவ மழை பொய்த்து விட்டது.

தூறலின் சாரலில்
புலண்கள் விழித்து
ஆனந்தம் பாடியதும்
மலர்களின் மகந்தத்தில்
நீர் பட்டு
சிலிர்க்கக் கண்டதும்
கால்களை மழைநீரில்
நனைய விட்டு
விளையாடியதும்
கெட்டிமேளத்தோடு கைகோர்த்த
அடைமழை காலத்தில்
தொப்பமாய் நனைந்து கிடந்ததும்
ஞாபகத்தில் இனிக்கிறது.

***

 தாஜ்

satajdeen@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *