அம்மா

கவிதைகள் (All)

விழுந்தது நான்…

வலித்தது உனக்கு!

காயம் எனக்கு…

ரணம் உனக்கு!

வெயில் எனக்கு…

வேர்வை உனக்கு!

போர்வை எனக்கு…

குளிர் உனக்கு!

இன்பம் எனக்கு…

துன்பம் உனக்கு!

ஊதியம்  எனக்கு…

உழைப்பு உனக்கு!

‘’அம்மாவின்”

மடி எனக்கு

மனசு  எனக்கு

அன்பு எனக்கு

அனைத்தும் எனக்கு

இப்படி

எனக்கே

எனக்கான

தாயிற்கு…

இவையனைத்தும்

இணைந்த  முழுமையாய்

இருப்பேன்

என்னாளும்

நான்  உனக்கு…!!!

– சை. சமீர் கரீம்  (8ஆம் வகுப்பு)
trichysyed@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *